Showing posts with label TamilNadu. Show all posts
Showing posts with label TamilNadu. Show all posts

Wednesday, 23 December 2015

உயிர்பெற்று வரும் அழிந்து போன தனுஷ்கோடி!

ழிப்பேரலைக்குள் மூழ்கி, இன்றும் அதன் மிச்சசொச்சங்களுடன் நினைவு சின்னமாக திகழும் தமிழகத்தின் துறைமுக நகரங்களில் ஒன்றான தனுஷ்கோடி, அழிந்து போன 52-ம் ஆண்டில் இன்று கால் பதிக்கிறது.

இந்திய நாட்டின் தென்கோடி எல்லைப்பகுதி தனுஷ்கோடி. ராமனின் கையில் இருந்த வில்லினை போன்ற தோற்றம் கொண்ட நிலப்பகுதி இது என்பதால்,  இதற்கு தனுஷ்கோடி என்ற பெயர் வந்ததாக வரலாறு உண்டு. வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் தனுஷ்கோடி,  இன்றுவரை மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாகத்தான் அரசால் கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் 1964-ம் ஆண்டில் ஏற்பட்ட கோரப்புயல்தான்.
1964-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி,  தெற்கு அந்தமான் பகுதியில் புயல் ஒன்று உருவானது. இந்த புயல் மெல்ல மெல்ல வலுப்பெற்று இலங்கையை நோக்கி நகர்ந்தது. மணிக்கு 400 முதல் 550 கி.மீ வேகத்தில் வந்த இந்த புயல்,  டிசம்பர் 22-ம் தேதி இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளான வவுனியாவை தாக்கியது. அதன் பின் வங்கக்கடலில் உள்ள பாக்ஜலசந்தி கடலில் மையம் கொண்ட இந்த புயல்தான்,  23-ம் தேதி அதிகாலை தனுஷ்கோடியை நோக்கி வந்தது. இந்த புயலின் வெளிப்பாடாக மணிக்கு 280 கி.மீ வேகத்தில் காற்று வீசியதுடன், கடும் மழையும் பெய்தது. இந்த புயல்தான் தங்கள் வாழ்க்கையை புரட்டி போட உள்ளது என்பதை அறியாத மக்கள்,  வழக்கம் போல் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதில் பாம்பன் - தனுஷ்கோடி இடையிலான பயணிகள் ரயிலும் ஒன்று.
இந்தியா வழியாக இலங்கை செல்ல விரும்புபவர்களுக்கென அந்நாளில் போட் மெயில் சர்வீஸ் இருந்து வந்தது. ரயில் மற்றும் கப்பல் வழி பயணமான  இதில்,  சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயிலில் தனுஷ்கோடிக்கு முதலில் வரவேண்டும். அங்கிருந்து இலங்கை செல்ல தயாராக இருக்கும் இர்வின் - கோஷன் என்ற கப்பலில் பயணித்து  இலங்கையை அடையலாம். இது தவிர தனுஷ்கோடிக்கு வர விரும்பும் யாத்திரைவாசிகள் மற்றும் உள்ளூர் பயணிகளுக்காக ‘வாட்டர் டாங்’ எனப்படும் பயணிகள் ரயிலும் நாள்தோறும் இயங்கி வந்தது.
23-ம் தேதி நள்ளிரவு இந்த ரயில் தனுஷ்கோடியை நோக்கி வந்து கொண்டிருந்தது. தனுஷ்கோடியை அடைய சில நூறு அடி தூரமே இருந்த நிலையில், பலத்த காற்றுடன் மழையும் கொட்ட துவங்கியது. இதனால் தனுஷ்கோடிக்கு ரயில் வருவதற்கான அனுமதி சிக்னல் கொடுக்கப்படவில்லை. கடும் இருட்டில் மழையும் கொட்டியதால்,  ரயில் டிரைவரால் இந்த சிக்னலை பார்க்க  முடியவில்லை. இதனால் பயணிகள் ரயில் தனுஷ்கோடியை நோக்கி செல்ல, அந்நேரத்தில் எழுந்த ஆழிப்பேரலை ரயிலின் 6 பெட்டிகளை ஆழ்கடலுக்குள் இழுத்து சென்றது. நள்ளிரவு நேரம் என்பதால் ஜன்னல்கள், கதவு என அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் ரயிலில் பயணித்த 115 பேரும் பரிதாபமாக பலியாகினர். ஆழிப்பேரலையின் இந்த கோர தாண்டவம் பற்றிய செய்தி கூட இரு நாட்களுக்கு பின்னரே அரசு நிர்வாகங்களுக்கு தெரிய வந்தது.
இதன்பின்னரும் தொடர்ந்து வீசிய புயலில் சிக்கி தனுஷ்கோடி நகரமே உருக்குலைந்து போனது. இங்கிருந்த ரயில் நிலையம், அஞ்சலகம், கோயில்கள், தேவாலயம், நகரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் என ஒன்று கூட புயலுக்கு தப்பவில்லை.  ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிரமாணட கட்டடங்களே கடலால் துவம்சம் செய்யப்பட்ட நிலையில், ஏழை மீனவர்களின் வீடுகள் என்னவாகியிருக்கும் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அந்தளவிற்கு சுமார் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் நீராலும், மணல் திட்டுகளாலும் தனுஷ்கோடி நகரம் மூழ்கடிக்கப்பட்டது. இதில் 1800-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
புயலின் கோரத்தை உணர்ந்த அரசு, தனுஷ்கோடி பகுதியை இனி மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக (Unfit for living) அறிவித்தது. தனுஷ்கோடியில் வசித்த மக்களுக்காக புதிய வாழ்விடங்கள் உருவாக்கப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டனர்.
கடல் வழி போக்குவரத்து வளர்ந்து வரும் இக்காலத்தில்,  இருபுறமும் கடல் சூழ்ந்த,  மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக அறிவிக்கப்பட்ட தனுஷ்கோடியை, மீண்டும் மனிதர்கள் வாழ தகுதியுடைய பகுதியாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. அதன் முதல் கட்டமாக இந்திய நிலப்பகுதியின் எல்லை வரை சாலை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சுமார் 53 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் இந்த பணியை துவக்கியுள்ளனர். 64-ம் ஆண்டு புயலில் மிச்சமாக இருந்த முகுந்தராயர் சத்திரம் பகுதியில் இருந்து, இந்திய நிலப்பரப்பின் எல்லையான அரிச்சல் முனை வரை சாலை அமைக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இது தவிர ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கு உதவும் வகையில்,  துறைமுகம் ஒன்றும் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் அமைககப்பட்டு வருகிறது.
இவை தவிர தனுஷ்கோடி முதல் இலங்கையின் தலைமன்னார் வரையிலான 23 கி.மீ தூரத்திற்கு,  கடலில் பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்த பாரதிய ஜனதா கட்சியினர்,  தற்போது தங்கள் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு ‘மாற்று பாதையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவோம்’ என்கின்றனர். இவையெல்லாம் கனவாகவே இருந்துவிடாமல் நனவாகினால், 64-க்கு முந்தையை தனுஷ்கோடி நகரத்தை நாளைய தலைமுறையினர் காண வாய்ப்பு ஏற்படும்.
அது மட்டுமின்றி கடல் கொண்ட தனுஷ்கோடி பகுதியில் குடிதண்ணீர், சாலை, மின்சாரம் என எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையிலும்,  தனுஷ்கோடி கடலை தங்களை தாலாட்டும் தாயின் மடியாக கருதும் மீனவர்கள்,  இன்னும் அந்த மணற்குன்றுகளுக்கு மத்தியில் வாழ்வதையே வரமாக கருதி வசித்து வருகின்றனர்.
அந்த மீனவர்களுக்கு மட்டுமல்லாது,  நாடு முழுவதிலும் இருந்து தனுஷ்கோடியை காணவரும் சுற்றுலா பயணிகளுக்கும் 52 ஆண்டுகளுக்கு பின் மேற்கொள்ளப்பட இருக்கும் இந்த திட்டங்கள் புதிய நம்பிக்கையினை ஏற்படுத்தும்.

Saturday, 24 October 2015

Weldon my dear boy

துணிச்சலுடன் செய்யும் காரியத்திற்கு வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கீழாய்க்குடியைச் சேர்ந்த மாணவர் சுந்தரபாண்டி திகழ்கிறார். சராசரி மாணவர்களைப் போல் இளமைப் பருவத்தில் துள்ளித் திரிந்தவர். நான்காம் வகுப்பு படித்த போது வீட்டு மொட்டைமாடி அருகே செல்லும் உயர் அழுத்த மின்கம்பியை விளையாட்டாக தொட்ட போது மின்சாரம் தாக்கி இரண்டு கைகளும் கருகின.
மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு இரண்டு கைகளும் அகற்றப்பட்டது. நம்பிக்கையை இழக்காத சுந்தரபாண்டி, சக மாணவர்களைப் போன்று நீச்சல் பயிற்சியில் கவனம் செலுத்தினார். இதன் மூலம் பல சாதனைகள் நிகழ்த்தி வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
சென்னை வேளச்சேரியில் நடந்த மாற்றுத் திறனாளி களுக்கான மாநில நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை நாயகனாக திகழ்கிறார்.
இது எப்படி சாத்தியம், சுந்தரபாண்டி கூறுகிறார்: நான் சவுராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறேன். எனது தந்தை முருகேசன், தாய் மகேஸ்வரி விவசாய வேலை செய்கிறார்கள். பத்து வயதில் மின் விபத்தில் கைகளை இழந்தேன். எனது சுய முயற்சியினால் ஒரு வருடத்தில் எழுத கற்றுக் கொண்டேன். எனது பணியினை, நானே செய்து கொள்கிறேன். தொடர்ந்து கிராம கண்மாய் நீரில் குளிக்கும் போது நீச்சல் கற்றுக் கொண்டேன்.
தொடர்ந்து சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டிகள் நடப்பதாக எங்கள் பகுதி புதுவாழ்வு திட்ட ஒருங் கிணைப்பாளர்கள் சுசிலா, ராஜேஸ்வரி கூறினர். எனக்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு மையத்தில் இரண்டு நாள் நீச்சல் பயிற்சி கொடுத்தனர். ஜூலை 24, 25 ல் நடந்த 3 வது மாநில பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு, 100 மீ., பேக் ஸ்ட்ரோக் ஜூனியர் மற்றும், 100 மீ., பிரஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம், ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கப்பரிசு பெற்றேன், என்றார்.

Great man

தமிழ் மொழி தவிர வேறு மொழி பேச, படிக்க தெரியாமல் குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் இளைஞர்கள் மத்தியில் பள்ளி படிப்பு கூட முடிக்காமல் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராட்டி, குஜராத்தி, வங்கம் ஆகிய 8 மொழிகளில் பேசி பக்தர்களை கவர்ந்து வருகிறார் தன்னம்பிக்கை மனிதர் புஷ்பரத்தினம்.
ராமேஸ்வரம் வீரபத்திரன் கோயில் தெருவைச் சேர்ந்த இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். வலதுகாலில் ஏற்பட்ட வலிக்கு தவறான சிகிச்சை பெற்றதால் காலை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தும் தன்னம்பிக்கை இழக்காத புஷ்பரத்தினம், பிறர் உதவியின்றி உழைத்துவாழ வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். சிறு வயது முதலே கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் இறைத்து ஊற்றும் பணியில் ஈடுபட்டார். தற்போது கோயில் வரலாற்று புத்தகங்களை 3 சக்கர வாகனத்தின் உதவியுடன் அலைந்து திரிந்து விற்பனை செய்துவருகிறார். இதற்கு மொழி பிரச்னையாக இருந்ததால் தமிழ் மட்டுமின்றி இதர மொழிகளையும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
படிப்படியாக இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, குஜராத்தி, வங்கம் ஆகிய 8 மொழிகளை கற்று கைதேர்ந்துள்ள இவர், வெளிமாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களிடம் அவரவர் மொழியில் சரளமாக பேசி புத்தகங்களை விற்பனை செய்துவருகிறார். இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.150 முதல் ரூ.300 வரை சம்பாதித்து வருகிறார். இந்த வருவாய் அன்றாட குடும்ப செலவுக்கு போதுமானதாக இல்லை என்பதால் விற்பனையை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். கோயில் வரலாற்று புத்தகத்தை கூவி, கூவி விற்பனை செய்வதன் மூலம் சுவாமி, அம்மன் அருள் இன்று அல்லது நாளை கண்டிப்பாக கிடைக்கும் என நம்புகிறார்.
படித்து பட்டம் பெற்று வேலை கிடைக்காமல் விரக்தியில் திரியும் இளைஞர்களுக்கு புஷ்பரத்தினம் முன் உதாரணமாக திகழ்கிறார். இவரது தன்னம்பிக்கையை பாராட்ட விரும்புவோர் அலைபேசி எண்: 76394 94569 தொடர்பு கொள்ளலாம்

Sunday, 26 July 2015

India culture

                                                          I love Thanjavur
                                                           In Thanjavur, beautiful place famous in Thanjai Big temple.Most popular city Thanjavur in TamilNadu.This place is very interesting place and very attractive place.So, all of see the temple and many culture involved in this place....And How is it????