Saturday 20 February 2016

ஜிகா வைரஸை கட்டுப்படுத்த ரூ.1031 கோடி: உலக வங்கி நிதியுதவி

தென்அமெரிக்கா, கரிபீயன் நாடு களில் ஜிகா வைரஸை கட்டுப் படுத்த உலக வங்கி சார்பில் ரூ.1031 கோடி நிதியுதவி வழங்கப்பட் டுள்ளது.
பிரேசில், அர்ஜென்டினா, ஜமைக்கா, டொமினிக் குடியரசு, கியூபா, மெக்ஸிகோ, போர்ட்டோ ரிகோ, எல் சல்வடார், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் ஜிகா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸால் பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை யுடன் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் பிறக்கின்றன.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளிலும் ஜிகா வைரஸ் பரவியுள்ளது.
தென்அமெரிக்காவை அச்சுறுத் திய ஜிகா வைரஸ் தற்போது ஆசியாவிலும் கால் பதித்துள்ளது. சீனா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மாலத்தீவு உள்ளிட்ட ஆசிய நாடு களில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்ட றியப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் இருந்து ஆசியா முழுவதும் ஜிகா பரவக்கூடும் என்று அஞ்சப்படு கிறது.
இந்த வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை. எனவே வைரஸை கட்டுப் படுத்த உலக சுகாதார அமைப்பு அண்மையில் சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது.
இந்நிலையில் தென்அமெரிக்கா மற்றும் கரிபீயன் நாடுகளில் ஜிகா வைரஸை கட்டுப்படுத்த ரூ.1031 கோடியே 40 லட்சம் சிறப்பு நிதியுதவியாக வழங்கப்படும் என்று உலக வங்கி அறிவித்துள்ளது.
இந்த நிதி உலக சுகாதார அமைப்பு, யூனிசெப் உள்ளிட்ட ஐ.நா. சார்புடைய அமைப்புகளுக் கும் இதர தொண்டு நிறுவனங்களுக் கும் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து உலக வங்கி வட்டாரங்கள் கூறியபோது, பாதிக் கப்பட்ட நாடுகளுடன் கலந்தாலோ சித்த பிறகு நிதியுதவியை அறிவித் துள்ளோம், தேவைப்பட்டால் கூடுத லாக நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.
உலக வங்கியின் நிதியுதவியில் ஜிகா வைரஸுக்கு மருந்து கண்டு பிடிப்பதற்கான ஆராய்ச்சிக்கு பெருந்தொகை ஒதுக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடைசி டெஸ்டில் அதிவேக சதம்: மெக்கல்லம் ஓய்வுக்கு முன் உலக சாதனை!

சதமடித்த மெக்கல்லம் | படம்: கெட்டீ இமேஜஸ்தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிவரும் நியூஸிலாந்தின் ப்ரெண்டன் மெக்கல்லம், டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்து உலக சாதனை படைத்தார். வெறும் 54 பந்துகளில் சதமெடுத்து அவர் இதை சாதித்தார்.
ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது டெஸ்ட் போட்டி க்ரைஸ்ட்சர்ச் நகரில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய நியூஸி. அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில் மெக்கல்லம் களமிறங்கினார்.
ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கியவர் 39 ரன்கள் எடுத்திருந்தபோது பாட்டின்ஸன் பந்தில் மார்ஷிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக ஆட்டமிழக்காமல் தப்பினார். அங்கிருந்து தொடர்ந்து ஆஸி. பந்துவீச்சை விளாசி தள்ளிய மெக்கல்லம் வெறும் 54 பந்துகளில் சதத்தை எட்டினார்.
தனது கடைசி மற்றும் 101-வது டெஸ்ட் போட்டியில் ஆடும் மெக்கல்லத்தோடு கோரே ஆண்டர்சனும் இணைந்து தனது அணியை சரிவிலிருந்து மீட்டார்.
மெக்கல்லம் 100 ரன்கள் எடுப்பதற்குள் 4 சிக்ஸர்களை அடித்திருந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் (மொத்தம் 106 சிக்ஸர்கள்) அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
மெக்கல்லம் 145 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இதில் மொத்தம் 21 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடக்கம் ஆண்டர்சன் 72 ரன்களுக்கு வெளியேறினார். இந்த இணை 110 பந்துகளில் 179 ரன்களை சேர்த்திருந்தது. இறுதியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 370 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதற்கு முன் 1986-ஆம் வருடம், மேற்கிந்திய தீவுகள் வீரர் விவ். ரிச்சர்ட்ஸ் 56 பந்துகளில் சதம் எடுத்ததுதான் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் எடுத்த சாதனையாக இருந்தது.
அதே போல பாகிஸ்தானின் மிஸ் பா உல் ஹக்கும் 2014-ஆம் வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 56 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.