Wednesday 28 October 2015

Chennai Silks in Madurai

The Chennai Silks (TCS) is the largest textile kingdom in Tamilnadu that has proven to be a shopper's delight in wedding sarees, kanchipuram silk sarees,kids,gens collection for all.......
https://www.google.co.in/maps/place/madurai+chennai+silks/data=!4m2!3m1!1s0x0:0xc6200b85d13b32bc?sa=X&ved=0CCwQrwswAGoVChMIi7TWqsvkyAIVhsSOCh1dXQj_
37, Thangam Theatre Complex, W Perumal Mesthri St, Madurai Main, Madurai, Tamil Nadu 625001

Tuesday 27 October 2015

My wish

My Advance Deepavali gift... 
Intha link ah Open pannuga and screen la enganallum touch pannuga
share your friends......

Saturday 24 October 2015

சுத்தமான நீரில் தயாரான எரிவாயுவில் இயங்கும் டூவீலர்

புதுக்கோட்டை : சுத்தமான தண்ணீரில் சோப்பு மேக்கர் (வேதிப்பொருள்) கலந்து அதன்மூலம் காஸ் தயாரித்து மோட்டார் என்ஜினை இயக்கி புதுக்கோட்டை மெக்கானிக் சாதனை படைத்துள்ளார். 

   புதுக்கோட்டை காமராஜபுரம் 8ம் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (36). 10ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தனது தந்தை ஹரிகிருஷ்ணனுடன் இணைந்து இப்பகுதியில் கடந்த 8 வருடமாக நான்கு சக்கர வாகனம் பழுதுநீக்கும் மெக்கானிக் கடை வைத்துள்ளார். தனது வழக்கமான மெக்கானிக் தொழிலுக்கு இடையில் மாற்று எரிபொருள் கண்டுபிடித்து மோட்டார் வாகனங்களை இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், அதற்கான முயற்சியில் இறங்கினார். 

    பல வருட முயற்சிக்கு பிறகு உப்பு கலக்காத சுத்தமான தண்ணீரில் சோப்பு தயாரிக்க பயன்படும் சோப்பு மேக்கர் என்று அழைக்கப்படும் சோடியம் ஹைட்ராக்சைடு என்ற பொருளை கலந்து அதிலிருந்து வெளியேறும் காஸ் மூலம் வாகன இன்ஜின்களை இயக்கும் முறையை கண்டுபிடித்துள்ளார். 

    இதற்காக ஒரு பிளாஸ்டிக் டேங்கில் சுத்தமான தண்ணீருடன்  சோடியம் ஹைட்ராக்சைடை கலக்குகிறார். பின்னர் இந்த தண்ணீர், 12 வோல்ட் பேட்டரியின் மூலம் இணைப்பு கொடுக்கப்பட்ட 26 ஸ்டீல் பிளேட் மற்றும் ஓரிங் பொருத்தப்பட்ட குடுவைக்குள் செல்கிறது. அப்போது அதற்குள் வேதிவினை நிகழ்ந்து காஸ் வெளியேறுகிறது. 

    இந்த காஸ் ஒரு டியூப் வழியாக ஒரு பலூனில் அடைக்கப்படுகிறது. பின்னர் மோட்டார் பைக் என்ஜினிற்குள் இந்த பலூனில் இருக்கும் காஸ் டியூப் வழியாக உள்ளே செல்லும் வகையில் பொருத்தப்படுகிறது. இப்போது அந்த மோட்டார் பைக்கினை இயக்கினால், இந்த பலூனில் இருக்கும் காஸ்  அந்த மோட்டார் என்ஜின் இயங்குகிறது. பலூனில் இருக்கும் காஸ் தீர்ந்தபின் என்ஜின் நின்று விடுகிறது. 

    இதுகுறித்து மெக்கானிக் சிவக்குமார் கூறுகையில், இந்த காஸ் மூலம் அனைத்து வாகனங்கள் மற்றும் ஜெனரேட்டர் என்ஜின்களை இயக்க முடியும் என்பதை கண்டுபிடித்துள்ளேன். இதனை தற்போது சிறிய அளவில் செய்துள்ளேன். பிளேட் மற்றும் ஓரிங் பொருத்தும் எண்ணிக்கையை அதிகரிக்கின்றபோது அதிக அளவில் காஸ் உற்பத்தி செய்து பயன்படுத்தலாம். இந்த எரிபொருளால் மாசு ஏற்படாது, அதிக வெப்பம் ஏற்படாது. பெட்ரோலுக்கு சிறந்த மாற்று எரிபொருளாகும்.  இந்த கிட் தயாரிக்க  ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன். சிறிய அளவில் தயாரான இந்த கருவியை கொண்டு 10 நிமிடத்தில் தயாரான காஸ் மூலம் 5 நிமிடம் டூவீலரை இயக்க செய்யலாம். 

    தண்ணீர் டேங்கில் ஊற்றப்பட்ட தண்ணீர் குறையும் வரை காஸ் தயாராகிக்கொண்டிருக்கும். ஓரிங் பிளேட் அதிகம் சேர்த்தால் இன்னும் அதிகம் காஸ் தயாரிக்கலாம். இந்த முயற்சிக்கு அரசும், சமூக ஆர்வலர்களும் உதவிகள் செய்தால் இதனை நடைமுறைக்கு கொண்டுவருவேன் என்றார்.

Mexico

400 ஆண்டுகளுக்கு முன் ஆற்றுக்குள் புதைந்த தேவாலயம் மீண்டும் காட்சியளிக்கும் வினோதம்
மெக்சிக்கோவில் நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய மக்களே மறந்துபோன தேவாலயம் ஒன்று, ஆற்றுக்குள் இருந்து வெளியே வந்துள்ளது.இந்நாட்டின் நெசஹுவால்கோயோட்ல் நீர்த்தேக்கத்தில் வறட்சியால் எண்பத்து இரண்டு அடிக்கு நீர் குறைந்து போனது. பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் ப்ரெய்ர் பார்ட்டோலோம் டி லா கஸாஸ் என்கிற பாதிரியாரின் தலைமையில் இப்பகுதியைச் சேர்ந்த ஸோக் மக்களால் நூற்றி எண்பத்து மூன்றடி உயரமுள்ள இந்த தேவாலயம் கட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Oneclick oneshare's photo.

Weldon my dear boy

துணிச்சலுடன் செய்யும் காரியத்திற்கு வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கீழாய்க்குடியைச் சேர்ந்த மாணவர் சுந்தரபாண்டி திகழ்கிறார். சராசரி மாணவர்களைப் போல் இளமைப் பருவத்தில் துள்ளித் திரிந்தவர். நான்காம் வகுப்பு படித்த போது வீட்டு மொட்டைமாடி அருகே செல்லும் உயர் அழுத்த மின்கம்பியை விளையாட்டாக தொட்ட போது மின்சாரம் தாக்கி இரண்டு கைகளும் கருகின.
மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு இரண்டு கைகளும் அகற்றப்பட்டது. நம்பிக்கையை இழக்காத சுந்தரபாண்டி, சக மாணவர்களைப் போன்று நீச்சல் பயிற்சியில் கவனம் செலுத்தினார். இதன் மூலம் பல சாதனைகள் நிகழ்த்தி வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
சென்னை வேளச்சேரியில் நடந்த மாற்றுத் திறனாளி களுக்கான மாநில நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை நாயகனாக திகழ்கிறார்.
இது எப்படி சாத்தியம், சுந்தரபாண்டி கூறுகிறார்: நான் சவுராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறேன். எனது தந்தை முருகேசன், தாய் மகேஸ்வரி விவசாய வேலை செய்கிறார்கள். பத்து வயதில் மின் விபத்தில் கைகளை இழந்தேன். எனது சுய முயற்சியினால் ஒரு வருடத்தில் எழுத கற்றுக் கொண்டேன். எனது பணியினை, நானே செய்து கொள்கிறேன். தொடர்ந்து கிராம கண்மாய் நீரில் குளிக்கும் போது நீச்சல் கற்றுக் கொண்டேன்.
தொடர்ந்து சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டிகள் நடப்பதாக எங்கள் பகுதி புதுவாழ்வு திட்ட ஒருங் கிணைப்பாளர்கள் சுசிலா, ராஜேஸ்வரி கூறினர். எனக்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு மையத்தில் இரண்டு நாள் நீச்சல் பயிற்சி கொடுத்தனர். ஜூலை 24, 25 ல் நடந்த 3 வது மாநில பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு, 100 மீ., பேக் ஸ்ட்ரோக் ஜூனியர் மற்றும், 100 மீ., பிரஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம், ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கப்பரிசு பெற்றேன், என்றார்.

Great man

தமிழ் மொழி தவிர வேறு மொழி பேச, படிக்க தெரியாமல் குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் இளைஞர்கள் மத்தியில் பள்ளி படிப்பு கூட முடிக்காமல் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராட்டி, குஜராத்தி, வங்கம் ஆகிய 8 மொழிகளில் பேசி பக்தர்களை கவர்ந்து வருகிறார் தன்னம்பிக்கை மனிதர் புஷ்பரத்தினம்.
ராமேஸ்வரம் வீரபத்திரன் கோயில் தெருவைச் சேர்ந்த இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். வலதுகாலில் ஏற்பட்ட வலிக்கு தவறான சிகிச்சை பெற்றதால் காலை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தும் தன்னம்பிக்கை இழக்காத புஷ்பரத்தினம், பிறர் உதவியின்றி உழைத்துவாழ வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். சிறு வயது முதலே கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் இறைத்து ஊற்றும் பணியில் ஈடுபட்டார். தற்போது கோயில் வரலாற்று புத்தகங்களை 3 சக்கர வாகனத்தின் உதவியுடன் அலைந்து திரிந்து விற்பனை செய்துவருகிறார். இதற்கு மொழி பிரச்னையாக இருந்ததால் தமிழ் மட்டுமின்றி இதர மொழிகளையும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
படிப்படியாக இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, குஜராத்தி, வங்கம் ஆகிய 8 மொழிகளை கற்று கைதேர்ந்துள்ள இவர், வெளிமாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களிடம் அவரவர் மொழியில் சரளமாக பேசி புத்தகங்களை விற்பனை செய்துவருகிறார். இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.150 முதல் ரூ.300 வரை சம்பாதித்து வருகிறார். இந்த வருவாய் அன்றாட குடும்ப செலவுக்கு போதுமானதாக இல்லை என்பதால் விற்பனையை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். கோயில் வரலாற்று புத்தகத்தை கூவி, கூவி விற்பனை செய்வதன் மூலம் சுவாமி, அம்மன் அருள் இன்று அல்லது நாளை கண்டிப்பாக கிடைக்கும் என நம்புகிறார்.
படித்து பட்டம் பெற்று வேலை கிடைக்காமல் விரக்தியில் திரியும் இளைஞர்களுக்கு புஷ்பரத்தினம் முன் உதாரணமாக திகழ்கிறார். இவரது தன்னம்பிக்கையை பாராட்ட விரும்புவோர் அலைபேசி எண்: 76394 94569 தொடர்பு கொள்ளலாம்