Friday 5 August 2016

படித்தேன் பகிர்ந்தேன்...

வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

அவசியம் படிக்கவும். பகிறவும்.
உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம். அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது. எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன.

எல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது.
நித்து என்பவர் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும். அண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார். “தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது” என்பது மகனின் கம்ப்ளைண்ட். எங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. இரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான். அன்று மாலையும் மீண்டும் அதே ஆர்ப்பாட்டம். அப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது.
கணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன். சிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர். “பேட்டரி ஓவர் ஹீட் ஆகிவிட்டது போல. அதான் அந்த துர்நாற்றம்” என்றார் அவர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால்… பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தோம். என்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை.

திடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. பேட்டரி ஒவர் ஹீட் ஆனால் ‘ஹைடரஜன் சல்ஃபேட்’ வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும். அடுத்து நுரையீரலிலும் பரவும். இருமல் ஆரம்பிக்கும். மயக்கம் ஏற்படும்.. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள். நுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம். மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன். மருத்துவரின் தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார். “பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது. அதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு. எல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு” என்றார் கணவர்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார். இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது. ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த அதிர்ச்சித் தகவல் குறித்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர் கூறிய சில அட்வைஸ்கள் : எந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். இன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். தரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன. அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு. காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளை வைக்க வேண்டும். பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சி பெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது.
படித்தேன் பகிர்ந்தேன்.... பயனென்று நினைத்தால் பகிருங்கள்.....

Saturday 5 March 2016

Results published

Anna University Results Nov dec 2015 announced
Check using below link
coe2.annauniversity.edu

Saturday 20 February 2016

ஜிகா வைரஸை கட்டுப்படுத்த ரூ.1031 கோடி: உலக வங்கி நிதியுதவி

தென்அமெரிக்கா, கரிபீயன் நாடு களில் ஜிகா வைரஸை கட்டுப் படுத்த உலக வங்கி சார்பில் ரூ.1031 கோடி நிதியுதவி வழங்கப்பட் டுள்ளது.
பிரேசில், அர்ஜென்டினா, ஜமைக்கா, டொமினிக் குடியரசு, கியூபா, மெக்ஸிகோ, போர்ட்டோ ரிகோ, எல் சல்வடார், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் ஜிகா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸால் பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை யுடன் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் பிறக்கின்றன.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளிலும் ஜிகா வைரஸ் பரவியுள்ளது.
தென்அமெரிக்காவை அச்சுறுத் திய ஜிகா வைரஸ் தற்போது ஆசியாவிலும் கால் பதித்துள்ளது. சீனா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மாலத்தீவு உள்ளிட்ட ஆசிய நாடு களில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்ட றியப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் இருந்து ஆசியா முழுவதும் ஜிகா பரவக்கூடும் என்று அஞ்சப்படு கிறது.
இந்த வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை. எனவே வைரஸை கட்டுப் படுத்த உலக சுகாதார அமைப்பு அண்மையில் சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது.
இந்நிலையில் தென்அமெரிக்கா மற்றும் கரிபீயன் நாடுகளில் ஜிகா வைரஸை கட்டுப்படுத்த ரூ.1031 கோடியே 40 லட்சம் சிறப்பு நிதியுதவியாக வழங்கப்படும் என்று உலக வங்கி அறிவித்துள்ளது.
இந்த நிதி உலக சுகாதார அமைப்பு, யூனிசெப் உள்ளிட்ட ஐ.நா. சார்புடைய அமைப்புகளுக் கும் இதர தொண்டு நிறுவனங்களுக் கும் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து உலக வங்கி வட்டாரங்கள் கூறியபோது, பாதிக் கப்பட்ட நாடுகளுடன் கலந்தாலோ சித்த பிறகு நிதியுதவியை அறிவித் துள்ளோம், தேவைப்பட்டால் கூடுத லாக நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.
உலக வங்கியின் நிதியுதவியில் ஜிகா வைரஸுக்கு மருந்து கண்டு பிடிப்பதற்கான ஆராய்ச்சிக்கு பெருந்தொகை ஒதுக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடைசி டெஸ்டில் அதிவேக சதம்: மெக்கல்லம் ஓய்வுக்கு முன் உலக சாதனை!

சதமடித்த மெக்கல்லம் | படம்: கெட்டீ இமேஜஸ்தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிவரும் நியூஸிலாந்தின் ப்ரெண்டன் மெக்கல்லம், டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்து உலக சாதனை படைத்தார். வெறும் 54 பந்துகளில் சதமெடுத்து அவர் இதை சாதித்தார்.
ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது டெஸ்ட் போட்டி க்ரைஸ்ட்சர்ச் நகரில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய நியூஸி. அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில் மெக்கல்லம் களமிறங்கினார்.
ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கியவர் 39 ரன்கள் எடுத்திருந்தபோது பாட்டின்ஸன் பந்தில் மார்ஷிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக ஆட்டமிழக்காமல் தப்பினார். அங்கிருந்து தொடர்ந்து ஆஸி. பந்துவீச்சை விளாசி தள்ளிய மெக்கல்லம் வெறும் 54 பந்துகளில் சதத்தை எட்டினார்.
தனது கடைசி மற்றும் 101-வது டெஸ்ட் போட்டியில் ஆடும் மெக்கல்லத்தோடு கோரே ஆண்டர்சனும் இணைந்து தனது அணியை சரிவிலிருந்து மீட்டார்.
மெக்கல்லம் 100 ரன்கள் எடுப்பதற்குள் 4 சிக்ஸர்களை அடித்திருந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் (மொத்தம் 106 சிக்ஸர்கள்) அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
மெக்கல்லம் 145 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இதில் மொத்தம் 21 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடக்கம் ஆண்டர்சன் 72 ரன்களுக்கு வெளியேறினார். இந்த இணை 110 பந்துகளில் 179 ரன்களை சேர்த்திருந்தது. இறுதியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 370 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதற்கு முன் 1986-ஆம் வருடம், மேற்கிந்திய தீவுகள் வீரர் விவ். ரிச்சர்ட்ஸ் 56 பந்துகளில் சதம் எடுத்ததுதான் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் எடுத்த சாதனையாக இருந்தது.
அதே போல பாகிஸ்தானின் மிஸ் பா உல் ஹக்கும் 2014-ஆம் வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 56 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

Wednesday 27 January 2016

பூமிக்கு அடியில் 'மாபெரும் நிலத்தடி கடல்' இருப்பது கண்டுப்பிடிப்பு..!

விண்வெளியில் இருந்து வந்த பனிக்கட்டி வால்மீன்களால் தான், பூமி கிரக்தில் நீர் ஆதாரம் உருவாகியது என்று தான் இதுநாள் வரை பெரும்பாலான புவியியலாளர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். பூமிக்கு அடியில் 'மாபெரும் நிலத்தடி கடல்' இருப்பது கண்டுப்பிடிப்பு..! அந்த நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பூமியின் நீர் ஆதாரம் சார்ந்த அறிய கண்டுப்பிடிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது..!


அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள், பூமி கிரகத்தின் மேல்பரப்பு மற்றும் உட்கருவம் ஆகிய இரண்டிற்கும் மத்தியில் பரந்த அளவிலான நிலத்தடி கடல்பகுதி இருப்பதை கண்டுப்பிடித்துள்ளனர்.

Thanushkodi


who is real hero?

Really appreaciate anna...
pls one like and share in this man

Thursday 14 January 2016

2016 calendar in one tabular coiumn

 2016 calendar in one tabular column
  • Hi viewers,Are you check any dates or day, u check this calendar select the date and u will see the same row and u select the month finally select ur day. This calendar is share with your friends..thank you.
  • Advance HAPPY PONGAL


Friday 8 January 2016

10th and 12th exam timetable

Dear 12th & 10th Students Here is your Time table.
12TH PUBLIC TIME TABLE - MARCH 2016
04.03.2016 FRI TAMIL I
07.03.2016 MON TAMIL II
09.03.2016 WED ENGLISH I
10.03.2016 THU ENGLISH II
14.03.2016 MON Che/Acc
17.03.2016 THU Commerce/Home Sci/Geo.
18.03.2016 FRI Maths/Zoo/Micro bio/Nutri.Diet
21.03.2016 MON C.Eng/In.Cul/Com Sci/Bio-che/Ad.Lan
23.03.2016 WED Pol Sci/Nursing/Stat/Theo of Voc Sub
28.03.2016 MON BIO/HIS/BOT/B.MAT
01.04.2016 FRI Phy/Eco
10TH PUBLIC TIME TABLE - MARCH 2016
15.03.2016 TUE TAMIL I
16.03.2016 WED TAMIL II
22.03.2016 TUE ENGLISH I
29.03.2016 TUE ENGLISH II
04.04.2016 MON MATHEMATICS
07.04.2016 THU SCIENCE
11.04.2016 MON SOCIAL SCIENCE
13.04.2016 WED OPTIONAL SUBJECT
All the Best of luck for your Exams

Saturday 2 January 2016

Amazing mathematics

very interesting & meaningful msg:
If:
A B C D E F G H I J K LM N O P Q R S T U V W X Y Z
is equal to:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
24 25 26
Then,
H+A+R+D+W+O+R+K;
8+1+18+4+23+15+18+11=98%
K+N+O+W+L+E+D+G+E;
11+14+15+23+12+5+4+7+5=96%
L+O+V+E;
12+15+22+5 = 54%
L+U+C+K ;
12+21+3+11 = 47%
None of them makes 100%. Then what makes 100%?
Is it Money? NO!
M+O+N+E+Y= 13+15+14+5+25=72%
Leadership? NO!
L+E+A+D+E+R+S+H+I+P= 12+5+1+4+5+18+1
9+8+9+16=97%
Every problem has a solution, only if we perhaps change
our "ATTITUDE"...
A+T+T+I+T+U+D+E;
1+20+20+9+20+21+4+5 = 100%
It is therefore OUR ATTITUDE towards Life and Work that
makes
OUR Life:) %Successful.
Amazing Mathematics Share it